Latest topics
» மகா சதாசிவன் படம்by அச்சலா Wed Aug 20, 2014 1:40 pm
» அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்
by அச்சலா Mon Aug 18, 2014 4:36 am
» கதிர்காமம்
by அச்சலா Mon Aug 18, 2014 4:34 am
» பீமன்-அர்ச்சுனன் தருமரிடம் கூறுதல்
by அச்சலா Mon Aug 18, 2014 4:23 am
» இராமாயணம் வரலாறு
by அச்சலா Wed Sep 11, 2013 12:24 pm
» சிவராத்திரி விரதத்தின் சிறப்பு வாரியார் விளக்கம்
by அச்சலா Wed Sep 11, 2013 1:38 am
» சங்குகளும் அவற்றின் வகைகளும்.
by அச்சலா Wed Sep 11, 2013 12:11 am
» ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:34 pm
» பதினெட்டாம் படி பாலகன் வரலாறு
by அச்சலா Tue Sep 10, 2013 11:19 pm
இறைவணை பக்தியோடு வழிபடுக.
Page 1 of 1
இறைவணை பக்தியோடு வழிபடுக.
இறைவணை பக்தியோடு வழிபடுக.
கடவுள் பக்தி இருந்தாலே எல்லாம் நன்மையுடையவையாக இருக்கும். பக்தி என்பது வெறும் வாய்ச் சொல்லில் அமைந்து விடக்கூடாது. மனதை ஒரு நிலைப் படுத்தி அவன் முன் நாம் முழுமையாகச் சரணடைதல் வேண்டும். மனதை மறபக்கம் அலை மோத விட்டு இரு கை மட்டும் இறைவணை வணங்குவது போல் அவன் முன் நின்று விட்டு கடுவுளை வணங்கிணோம், இவன் கைவிட்டுவிட்டான் என்று புலம்பி அவனைக் குறை சொல்லி, கோவிலுக்குப் போகாமல் நம்பிக்கை இழந்து வாழும் மக்கள் தான் இப்போ அதிகம் இவ்வுலகில்.
செய்வனை திருந்தச்செய்.
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.
இறைன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து (உள்பொருள்) ஆகவும், சித்து (அறிவுடைய பொருள்) ஆகவும், ஆனந்தம் (இன்பமயமான பொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.
கடவுளைப் பல வடிவங்களில் வழிபடுகின்றோம். ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஒரு தெய்வத்தை நிலை நிறுத்தி குலதொய்வமாக நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். ஒவ்வொரு வடிவத்திலும் இறைவன் எமக்கு அருள் புரிகின்றான். முருகன், சிவன், கணபதி, வைரவர், ஆஞ்சனேயர், பிரம்மா, இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி, விஷ்ணு என்ற பல வடிவங்களிள் எமக்கு அருள் புரிகின்றான் இறைவன்.
அன்பே சிவம் என்பது போல் அன்போடு அவனை மனதில் நிலை நிறுத்தி எப்பொழுதும் வழிபடவேண்டும் நாம்.
எத்தனை படையல்கள் நாம் படைத்தாலும் அவனை உள்ளன்போடு வழி படுதல் தான் அவனைச் சென்றடைகின்றது. இறைவனின் மனதும் குளிர்மையடைகின்றது.
ஒவ்வொருவருக்கும் நாம் அன்பைச் செலுத்தி, நல் வார்த்தை பேசி, நல்ல சிந்தனைகள் செய்தாலே இது இறைவன் பாதம் சென்றடையும்.
நமது சமையத்தின் வரலாறே இறைவனால் படைக்கப்ட்ட உயிர்கள் அனைத்தும் இறைவணை அடைதலாகும். அதலால் அவன் மீது பக்தி செலுத்தி, காலை, மாலை, மதியம் அவணை நினைத்து பூஜித்து, அவன் அருளைப் பெற வேண்டும். நாம் எங்கு இருந்தாலும் அவன் அருள் நம்மைச் சுற்றியே இருக்கும். முக்கியமாக, புலம் பெயர் நாட்டில் சில மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் வீட்டில் ஏதோ கடமைக்கு ஒரு இவைன் படம் தொங்க விடப்பட்டிருக்கும் தாங்கள் இல்லத்திலும் இருக்கின்றான் இறைவன் என்று. இறைவணை முதலில் எங்கு வைத்து வழிபட வேண்டும்? ஓழுங்கான இடத்தில் வைத்து அவணை வழி பட வேண்டும். இறைவனுக்கு என்று ஒரு சிம்மாசனம் அமைத்து, எந்த ஒரு தீட்டு துடக்கும் அணுகாத படி அவனை வைத்து வழி படுதலே சிறந்ததாகும்.
நன்றி
பா.ராகினி
கடவுள் பக்தி இருந்தாலே எல்லாம் நன்மையுடையவையாக இருக்கும். பக்தி என்பது வெறும் வாய்ச் சொல்லில் அமைந்து விடக்கூடாது. மனதை ஒரு நிலைப் படுத்தி அவன் முன் நாம் முழுமையாகச் சரணடைதல் வேண்டும். மனதை மறபக்கம் அலை மோத விட்டு இரு கை மட்டும் இறைவணை வணங்குவது போல் அவன் முன் நின்று விட்டு கடுவுளை வணங்கிணோம், இவன் கைவிட்டுவிட்டான் என்று புலம்பி அவனைக் குறை சொல்லி, கோவிலுக்குப் போகாமல் நம்பிக்கை இழந்து வாழும் மக்கள் தான் இப்போ அதிகம் இவ்வுலகில்.
செய்வனை திருந்தச்செய்.
இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு.
இறைன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து (உள்பொருள்) ஆகவும், சித்து (அறிவுடைய பொருள்) ஆகவும், ஆனந்தம் (இன்பமயமான பொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.
இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான்.
கடவுளைப் பல வடிவங்களில் வழிபடுகின்றோம். ஒவ்வொருவரும் தங்கள் மனதில் ஒரு தெய்வத்தை நிலை நிறுத்தி குலதொய்வமாக நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். ஒவ்வொரு வடிவத்திலும் இறைவன் எமக்கு அருள் புரிகின்றான். முருகன், சிவன், கணபதி, வைரவர், ஆஞ்சனேயர், பிரம்மா, இலக்குமி, துர்க்கை, சரஸ்வதி, விஷ்ணு என்ற பல வடிவங்களிள் எமக்கு அருள் புரிகின்றான் இறைவன்.
அன்பே சிவம் என்பது போல் அன்போடு அவனை மனதில் நிலை நிறுத்தி எப்பொழுதும் வழிபடவேண்டும் நாம்.
எத்தனை படையல்கள் நாம் படைத்தாலும் அவனை உள்ளன்போடு வழி படுதல் தான் அவனைச் சென்றடைகின்றது. இறைவனின் மனதும் குளிர்மையடைகின்றது.
ஒவ்வொருவருக்கும் நாம் அன்பைச் செலுத்தி, நல் வார்த்தை பேசி, நல்ல சிந்தனைகள் செய்தாலே இது இறைவன் பாதம் சென்றடையும்.
நமது சமையத்தின் வரலாறே இறைவனால் படைக்கப்ட்ட உயிர்கள் அனைத்தும் இறைவணை அடைதலாகும். அதலால் அவன் மீது பக்தி செலுத்தி, காலை, மாலை, மதியம் அவணை நினைத்து பூஜித்து, அவன் அருளைப் பெற வேண்டும். நாம் எங்கு இருந்தாலும் அவன் அருள் நம்மைச் சுற்றியே இருக்கும். முக்கியமாக, புலம் பெயர் நாட்டில் சில மக்களைச் சந்திக்கும் போது அவர்கள் வீட்டில் ஏதோ கடமைக்கு ஒரு இவைன் படம் தொங்க விடப்பட்டிருக்கும் தாங்கள் இல்லத்திலும் இருக்கின்றான் இறைவன் என்று. இறைவணை முதலில் எங்கு வைத்து வழிபட வேண்டும்? ஓழுங்கான இடத்தில் வைத்து அவணை வழி பட வேண்டும். இறைவனுக்கு என்று ஒரு சிம்மாசனம் அமைத்து, எந்த ஒரு தீட்டு துடக்கும் அணுகாத படி அவனை வைத்து வழி படுதலே சிறந்ததாகும்.
நன்றி
பா.ராகினி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|